ஆட்சி மாற்றத்தால் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது – ரணில்

ஆட்சி மாற்றத்தால் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது – ரணில்

தற்போது நாட்டில் நிலவும் அனைத்து நெருக்கடிக்கான நிலமைகளையும் தீர்க்க தவறினால் அடுத்த சில மாதங்களில் மக்கள் நாட்டை இழக்க நேரிடும் என்றும் தற்போதைய நெருக்கடிகளை தீர்க்க தேசிய அரசாங்கத்தை அமைப்பதில் எந்த பயனும் இல்லை என முன்னாள் பிரதம மந்திரியம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

கிருலப்பனையில் நேற்று (14) இடம்பெற்ற இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கூட நாட்டின் நிலைமை இவ்வளவு மோசமாக பின்னடைவைச் சந்தித்ததில்லை எனவும் கூறிய அவர், தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை காத்து வளர்ச்சிப்படியை உயர்த்துவதற்கு அனைத்து தரப்பினர்களுக்கும் இடையில் ஒரு தேசிய உடன்பாடு தேவை என குறிப்பிட்டார்.

நிதி அமைச்சருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இடையில் ஓர் சுமூகமற்ற, முரண்பாடான நிலை இருப்பதாகத் தெரிவித்த அவர், அதனை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்றும், நாட்டின் நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு அரசாங்கம் அதிக நேரத்தை செலவிட்டபோதும் அவற்றுக்கான தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டது என்று தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையை அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாகவும் ஆனால் அது இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பதிலாக தற்போதுள்ள நிலைமைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனது தெரிவித்த அவர், நாடு பாதுகாக்கப்பட்டு முன்னோக்கி கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரக் கட்டமைப்பு தொடர்பாக அனைத்துத் தரப்பினருக்கும் இடையில் வலுவான உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்றார்.

Spread the love