நாடாளுமன்றத்தில் முஷாரப்பிற்கு 5000 ரூபா பணத்தை கொடுத்த சாணக்கியன்

நாட்டில் பரபரப்புக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றம் கூடியது. இதன்போது முஷாரப் MP ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு முட்டு கொடுத்து பேசியபோது, அருகில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் , முஷாரப் இற்கு 5000 ரூபா பணத்தை நீட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக நாடாளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், பலர் தமது பதவிகளை இராஜினாமா செய்துவருகின்றனர். அதோடு பல அரசியல் முக்கியஸ்தர்கள் நாட்டைவிட்டு தப்பியோடி வருகின்றனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியபோது முஷாரப் MP ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக பேசியபோது சாணாக்கியன் அவருக்கு பணத்தை எடுத்து நீட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து சபையில் களேபரம் ஏற்பட்டதுடன் ஆளுங்கட்சி எம்.பிக்கள் இதன்போது சாணக்கியனுக்கு எதிர்ப்பினை வெளியிட்டதாக கூறப்படும் நிலையில், குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Spread the love