நவம்பர் முதல் ஐ-போன் 5சி உற்பத்தி நிறுத்தம் -அறிவித்தது அப்பிள் நிறுவனம்

தொழில்நுட்ப நிறுவனமான அப்பிள், தனது தயாரிப்பான ஐபோன் 5 சி உற்பத்தி நிறுத்தப் போவதாக ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.  மேக்ரூமாஸ் குறிப்பின்படி, ஒக்ரோபர் 2020 இல் ஆப்பிள் ஐபோன் 5 சி போன் விண்டேஜ் தயாரிப்பாகிவிடும் என்றும், அதன் சேவை மற்றும் சிறிய அளவிலான பழுதுபார்ப்புகளை மட்டுமே சரி செய்ய முடியும்.

நவம்பர் முதலாம் திகதி முதல், அப்பிள் ஐபோன் 5 சி தயாரிப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டு, அனைத்து சேவை மற்றும் பழுது நீக்கம் முடிவுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளது. அதே நாளில் வை-பை(WIFI) மற்றும் டிடீ-எல்டிஇ உடன்  மூன்றாம் தலைமுறை ஐபாட் மினியும் காலாவதியானதாக அறிவிக்கப்படும் என்று அப்பிள் தெரிவித்துள்ளது. ஐபோன் 5 சி செப்ரெம்பர் 2013 இல் ஐபோன் 5எஸ் உடன் வெளியானது. மேலும், ஐபோன 5சி ஆனது நீலம், பச்சை, இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை உள்ளிட்ட பிரகாசமான வண்ணங்களின் விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love