இம்சை அரசனையும் விட்டு வைக்காத கொரோனா


நகைச்சுவை நடிகர் வடிவேலு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள வடிவேலு, ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ‘ எனும் படத்தில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் இரு நாள்களுக்கு முன்பு லண்டனில் இருந்து சென்னைக்குத் திரும்பிய வடிவேலுவுக்கு கொரோனாப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் எனக் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love