தொடர்ந்தும் உயரும் அமெரிக்க டொலரின் பெறுமதி! மத்திய வங்கி அறிவிப்பு

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 368.90 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 357.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாயின் மதிப்பில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது. அந்தவகையில், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 371.69 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 356.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேவேளை, ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 432.04 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 415.01 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Spread the love