தொடரை வென்றது இந்தியா

இந்தியா, மேற்கிந்தியா தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 3 போட்டிகளடங்கிய ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடரினை இந்தியா அணி வெள்ளையடிப்பு செய்து வென்றுள்ளது.

இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியினையும் இந்தியா அணி இலகுவாக வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பாடி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 265 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷ்ரெயாஸ் ஐயர் 80 ஓட்டங்களையும், ரிஷாப் பான்ட் 56 ஓட்டங்களையும், தீபக் ஷகார் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்களையும், அல்ஸாரி ஜோசப், ஹெய்டன் வோல்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 37.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 169 ஓட்டங்களை பெற்றது. இதில் ஒடேன் ஸ்மித் 38 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இந்தியா அணியின் பந்துவீச்சில் மொஹமட் சிராஜ், பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், தீபக் சஹர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

போட்டியின் நாயகனாக ஷ்ரெயாஸ் ஐயர் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, தொடரில் 9 விக்கெட்களை கைப்பற்றிய பிரதீஷ் கிருஷ்ணா தொடர் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Spread the love