தேசிய சரணாலயங்களை பார்வையிடும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்: கட்டணத்தை டொலர்களில் செலுத்தும் வசதி

யால தேசிய சரணாலயம் உட்பட இலங்கையில் உள்ள தேசிய சரணாலயங்களை பார்வையிட வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதற்கான கட்டணத்தை டொலர்களில் செலுத்தும் வசதிகளை வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு ஏற்படுத்தியுள்ளது.

நாடு டொலர்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

அதனடிப்படையில், இது தொடர்பான வேலைத்திட்டம் இம்மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக யால தேசிய சரணாலயத்திற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கான அனுமதிக்கான கட்டணத்தை டொலர்களில் செலுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டும் என்று வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திரா ஹேரத் தெரிவித்துள்ளார்.

Spread the love