தகுதியானோரில் 95% பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய இந்தியா

 

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள தகுதியானவர்களில், 95% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இந்தியாவின் சுகாதார அமைச்சகத்தின் டுவிட்டர் கணக்கில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக இந்தியாவில் 164.35 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும் அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் இரவு 7 மணி வரையிலான நிலவரப்படி, 49 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும் அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

Spread the love