டொலர் ஒன்றுக்கு 230 ரூபாய்- மத்திய வங்கி அறிவித்தல்

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் செலாவணி வீதத்தில் மேலும் நெகிழ்ச்சித்தன்மை சந்தைகளுக்கு அனுமதிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதற்காக வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்கள் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு 230 ரூபாயினை விஞ்சாத மட்டங்களில் இடம் பெறுமென இலங்கை மத்திய வங்கி கருதுகின்றது. இலங்கை மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டுச் சந்தையிலான அசைவுகளைத் தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றது.


அதற்கேற்ப பொருத்தமான கொள்கைத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் மத்திய வங்கியின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த பெப்ரவரியில் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவானது, இது கடந்த ஜனவரியில் நிலவிய தொகையை விட 2 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

Spread the love