ஜனாதிபதி விசாரணைகுழுவில் முன்னிலையானர் சந்திரிகா

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக தற்போதைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று (19/01) அழைக்கப்பட்டிருந்தார்.

நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் செயற்படுத்தப்பட்ட ஊழல் ஒழிப்பு குழு தொடர்பில் தகவல்களை அறிந்துகொள்வதற்காக தான் அழைக்கப்பட்டதாக அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

குறித்த விசாரணைகள் தொடர்பில் அவர் சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் வரை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Spread the love