ஜனாதிபதி ரணிலுடன் சீனத் தூதுவர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், சீனத் தூதுவர் சீ சென்ஹொங் இற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துகளை தெரிவித்த சீனத் தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

ஒரு சீனா கொள்கை தொடர்பில் இலங்கையின் கடைப்பிடிப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பற்றிய சாசனக் கோட்பாடுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி விக்கிரமசிங்க மீண்டும் வலியுறுத்தினார்.

Spread the love