ஜனாதிபதி இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பதற்கு இணக்கம்

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மகாநாயக்க தேரர்களுக்கு எழுத்து மூலம் பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்திலேயே ஜனாதிபதி இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டால் அதற்கு தானே பிரதமர் என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love