செவ்வாயில் மோதியது விண்கல்

செவ்வாய் கிரகத்தை விண்கல் மோதியதால் ஏற்பட்ட பாரிய பள்ளத்தை நாசா கண்டு பிடித்துள்ளது. கடந்த ஆண்டு அதிவேகமாக பயணித்த விண்கல் செவ்வாய் கிரகத்தின் மீது மோதியது. இதனால் கிரகம் எங்கும் அதிர் வலையை ஏற்படுத்தியதாக விஞ்ஞானிகள் தெரிவித்ததுடன் சுமார் 500 அடி பள்ளம் ஒன்று உருவானதாகவும் குறிப்பிட்டனர்.

இதன்போது 4 ரிச்டர் அளவு நில அதிர்வு ஏற்பட்டதாகவும் விண்கல் தாக்கிய இடத்தில் இருந்து 2,200 மைல்களுக்கு அப்பால் இருக்கும் நாசாவின் இன்சைட் விண்கலம் உணர்ந்ததாகவும் நாசா விஞ்ஞானிகள் மேலும் குறிப்பிட்டனர். இந்நிலையில் புதிதாக உருவான பள்ளத்தின் படத்தை செவ்வாயை சுற்றி வரும் நாசாவின் மற்றொரு விண்கலம் படம் பிடித்துள்ளது. இவ்வாறு செவ்வாயை தாக்கி இருக்கும் விண்கல் 16 தொடக்கம் 30 அடி பரப்புக் கொண்டது என்றும் இது பூமியை தாக்க வந்தால் வளி மண்டலத்திலேயே சிதைந்து விடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love