சர்வதேச நாணய நிதியத்தை நாடுக..! இலங்கை மத்திய வங்கி பரிந்துரை

தற்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள நிதி நெருக்கடி போன்ற பல நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை அணுக வேண்டியதன் கட்டாயத்தினை இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது பற்றி மத்திய வங்கி ஏற்கனவே அரசாங்கத்திடம் விசேட யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் விருப்பத்துடனோ விருப்பமின்றியோ மத்திய வங்கியுடனான கூட்டுடனேயே தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண மூன்றாம் தரப்பினரின் உதவியானது மிக முக்கியமானதாகும் எனவே மூன்றாம் தரப்பினரை நாடவேண்டும் என அவர் கூறியுள்ளார். எப்படியிருப்பினும் நாட்டின் நன்மை தீமைகளை உன்னிப்பாகக் கண்காணித்து அதற்கான செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கவேண்டும் எனவும் அவ்வாறு நிலமையை உணர்ந்து செயற்படாவிட்டால் தற்போதைய நெருக்கடி நிலமை மேலும் அதிகரிக்கலாம் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Spread the love