சம்பளம்,கொடுப்பனவு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சுகாதாரஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

சுகாதாரத் தொழிற்சங்க ஒன்றியத்தின் உறுப்பினர்களால் இன்று(08) காலை 6.30 முதல் நாளை(09) காலை 6.30 வரையான அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இரத்து செய்யப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர்கள் மற்றும் தாதியர் தொழிற்சங்கங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதாரத் தொழிற்சங்கங்களும் இன்றைய(08) அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே, அரசாங்கத்தின் முறையற்ற வரிக் கொள்கைக்கு எதிராக நாளை(09) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

Spread the love