சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த இராணுவ காவலரண்களை அமைக்க முடிவு

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியாமையால் பல்வேறு சவால்களை மக்கள் எதிர்கொண்டனர். இதனையடுத்து இவற்றை கட்டுப்படுத்த இராணுவ காவலரண்களை அமைக்க தற்சமயம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரணைமடு குளத்தின் கீழ் உள்ள ஆற்றுப்படுகையில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வு பாரியளவில் இடம்பெற்று வருகின்றது. நேற்றுமுன்தினம் அரசாங்க அதிபரின் பணிப்பின் கீழ் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட இடர் முகாமைத்துவ பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலாளர், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அடங்கிய குழுவினர் நேரடியாக சென்று நிலைமைகளை அவதானித்துள்ளனர். இதன்போது நிலைமைகளின் ஆபத்தினை உணர்ந்துகொண்ட இவர்கள் குறித்த பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த இராணுவ காவலரண்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

Spread the love