சட்டஒழுங்கை நிலைநாட்ட துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி!

நாடளாவிய ரீதியில் சட்டஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல்துறை அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய நடமாடும் காவல்துறை ரோந்துப்பணியை அதிகரிக்குமாறும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடவும் வன்முறைச்செயல்களில் ஈடுபடவும் மக்கள் தூண்டப்பட்டு வருவதாக புலனாய்வு அமைப்புகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.

எனவே குறிப்பிட்ட இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை ஏதேனும் கலவர நிலைமை ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்த, தேவைப்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவுகளையும் அவர் வழங்கியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Spread the love