கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ள சீனா!

கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய தயாராகி வருவதாக சீனாவின் என்ஜினியரிங் கோர்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

சீனாவின் என்ஜினியரிங் கோர்ப்பரேஷன் தலைவர் பாய் யின்ஷானுக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள என்ஜினியரிங் கோர்ப்பரேஷனின் பிரதான அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக அமைச்சர் அலி சப்ரி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Spread the love