பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கொழும்பில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. குறித்த கையெடுத்து வேட்டையானது கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது.

இதில் தமிழ் அரசியல் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்ததுடன், பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டு கையெழுத்துக்களை பதிவு செய்திருந்தனர். இந்த கையெழுத்து வேட்டையானது இன்று காலை 11 மணி முதல் பிற்பல் 1 மணி வரையில் இடம்பெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இதில் அனைரையும் இணைந்து கொள்ளுமாறு சர்வஜன நீதி அமைப்பின் ஊடான அதன் இணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love