குற்றச்சாட்டுகளை மறுதலித்து அறிக்கை வெளியிட்டுள்ள உகண்டா செரினிட்டி நிறுவனம்

இலங்கையில் தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுதலித்து உகண்டாவில் உள்ள செரினிட்டி குழுமத்தின் நிறுவனங்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

உகண்டாவில் உள்ள செரினிட்டி குழுமத்தின் நிறுவனங்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக பல முகநூல் பதிவுகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு வெளியான முகநூல் பதிவுகளின் குற்றச்சாட்டுகளை செரினிட்டி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் முற்றாக மறுத்துள்ளது.

Spread the love