கிண்ணத்தோடு திரும்பிய இலங்கை அணி

பொதுநலவாய விளையாட்டு போட்டிகளுக்கான,கிரிக்கெட் தெரிவுகாண் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி கிண்ணத்தோடு இன்று காலை இலங்கையை வந்தடைந்தது.

சாமரி அத்தபத்துவின் அதிரடி துடுப்பாட்டம்(48), அபார பந்துவீச்சின்(03) மூலம் 20-20 இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியினை 22 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது இலங்கை அணி.

மலேசியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை திரும்பிய அணியை பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் வரவேற்றனர்.

Spread the love