கமநல சேவை திணைக்களத்தால் விவசாயிகளுக்கு 4.2 பில்லியன் ரூபா நிதி வழங்கி வைப்பு

பெரும்போகத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காக 4.2 பில்லியன் ரூபா நிதி நேற்றைய தினம்(02) வைப்பிலிடப்பட்டுள்ளதாக கமநல சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம்(03), 06 பில்லியன் ரூபா நிதி வைப்பிலிடப்படவுள்ளதாக கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் E.M.L.அபேரத்ன குறிப்பிட்டார். இதற்காக 12 இலட்சம் விவசாயிகள் பயனாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 4.2 பில்லியன் ரூபா நிதி விவசாயிகளுக்கு வழங்கி வைப்பு – கமநல சேவை திணைக்களம்.

Spread the love