கடற்படையிடம் அனுமதி பெற்று கடற்றொழிலுக்கு செல்வதனால் சுதந்திரமாக தொழிலில் ஈடுபட முடியாதுள்ளது

கடற்படையிடம் அனுமதி பெற்று கடற்றொழிலுக்கு செல்வதனால் சுதந்திரமா தொழிலில் ஈடுபட முடியாதுள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நா.வர்ணகுலசிங்ம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வடமராட்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

சட்ட விரோதமாக இடம்பெறும் கடற்றொழிலை கட்டுப்படுத்துவதற்க்கு நடைமுறைப் படுத்தப்படாதிருக்கும் தடை சட்டங்கள் மூன்றையும் நடைமுறைப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Spread the love