கடந்த மாதத்திற்குள் சுமார் ஒரு இலட்சம் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

கடந்த மாதத்திற்குள் சுமார் ஒரு இலட்சம் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்திற்குள் 6 இலட்சத்து 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.

கடந்த வருடம் 7 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

Spread the love