ஓய்வுபெற அனுமதி கேட்கும், இலங்கை கால்பந்தாட்ட பயிற்சியாளர் 

2020 பெப்ரவரி மாதம் முதல் இலங்கையின் தேசிய கால்பந்து பயிற்சியாளராக கடமையாற்றிய பொஸ்னிய நாட்டின் அமீர் அலெஜிக் இலங்கையிலிருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளார்.

தற்போது தேசிய கால்பந்தாட்டப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய அவர் தற்போது இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் தொழில்நுட்ப பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு தாம் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அலர்ஜி இலங்கை கால்பந்து சம்மேளனத்திடம் தெரிவித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு உள்ளூர் பயிற்றுவிப்பாளர் ஒருவரை நியமிக்க எதிர் பார்த்திருப்பதனால், அவர் பதவி விலகுவதற்கு இலங்கைக் கால்பந்தாட்ட சம்மேளனம் அங்கீகாரம் வழங்கும் என அறியக்கிடைக்கின்றது.

Spread the love