ஐ.சி.சி. அதி சிறந்த வீரர் விருதுக்கு டி சில்வா,மத்யூஸ் பெயர்கள் பரிந்துரை

பங்களாதேஷ்க்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்து இலங்கையின் தொடர் வெற்றியில் பிரதான பங்காற்றிய அசித்த டி சில்வா, அஞ்சலோ மத்யூஸ் ஆகிய இருவரே ஐசிசி மாதாந்த விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அதே தொடரில் பங்ளாதேஷ் சார்பாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த முஷ்பிக்குர் ரஹிமும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பங்களாதேசுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபாரமாக பந்து வீசிய வேகப்பந்துவீச்சாளர் அசித்த பெர்னாண்டோ மொத்தமாக 13 விக்கெட்களை 16.61 என்ற சராசரியுடன் கைப்பற்றினார். சட்டோக்ராம் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்களை மாத்திரம் கைப்பற்றிய அசித்த பெர்னாண்டோ , மிர்பூரில் நடை பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றி இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார்.

முதல் இன்னிங்ஸில் 91 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றிய அசித்த பெர்னாண்டோ , 2 ஆவது இன்னிங்ஸில் 51 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தினார். ஓர் இன்னிங்ஸில் 6 விக்கெட் குவியலும் முழு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் குவியலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதிகளாகப் பதிவாகின. அஞ்சலோ மத்யூஸ் இலங்கையின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும் அனுபவசாலியுமான அஞ்சலோ மத்யூஸ் இரண்டு டெஸ்ட்களிலும் மிகத்திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மெத்யூஸ் மொத்தமாக 344 ஓட்டங்களைக் குவித்து 172.00 என்ற துடுப்பாட்ட சராசரியைக் கொண்டிருந்தார். சட்டாக்ரோமில் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 199 ஓட்டங்களைக் குவித்த மத்யூஸ், மிர்பூரில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் ஆட்ட மிழக்காமல் 145 ஓட்டங்களைப் பெற்றார். பங்களாதேஷ் வீரர் முஷ்பிக்குர் ரஹிமும் இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவர் முதலாவது டெஸ்டில் 105 ஓட்டங்களையும் 2 ஆவது டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 175 ஓட்டங்களையும் பெற்றார்.

Spread the love