ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டுள்ளார் – அமெரிக்கா அறிவிப்பு

வட மேற்கு சிரியாவில் அமெரிக்க சிறப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தலைவரான அபூ இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசதலைவர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் முன்னாள் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியை கொன்ற நடவடிக்கைக்குப் பிறகு அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அமெரிக்கத் தாக்குதல் இதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் , “கடவுள் நமது படைகளை பாதுகாக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அனைத்து அமெரிக்கர்களும் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/WhiteHouse/status/1489220744320012289/photo/1

https://www.nytimes.com/live/2022/02/03/world/us-raid-syria-isis

Spread the love