ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை குண்டு மழை.. சூப்பர் பவர் குண்டுகளை வீசும் ரஷ்ய வான்படை

ரஷ்ய உக்ரைன் போரானது கடந்த 28 நாளாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவானது உக்ரைன் மீது தனது மிகக்கொடூர தாக்கதல்களை தொடர்ந்து நீடித்துக்கொண்டே வருகிறது. வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றது ரஷ்யா.

இதன்போது ரஷ்ய படைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் எதிர்த்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைனில் கடந்த 5 நாட்களாக ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை என்கிற அடிப்படையில் ரஷ்ய போர் விமானங்கள் மரியுபோல் நகர் மீது பறந்து சென்று குண்டுகளை வாரி இறைத்து வருவதாக தகவல்கள் தெரியவருகின்றன. உக்ரைன் நகரங்கள் மீது கடந்த 24 மணி நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் நடந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனில் முக்கிய நகரங்களை பிடிக்க ரஷ்யா கடும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், துறைமுக நகரான மரியுபோல் நகரானது ரஷ்யாவின் குறித்த இலக்காகியுள்ளது. இதன் காரணமாக அந்த நகரின் மீது ரஷ்ய போர் கப்பல்கள் கடந்த 3 வாரங்களாக மிக மோசமான தாக்குதலை நடத்தி வருகின்றன,  அத்தோடு ரஷ்ய விமானங்கள் சூப்பர் பவர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ரஷ்யாவின் போர் விமானங்கள் அலை அலையாக பறந்து சென்று வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 5 நாட்களில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை ரஷ்ய போர் விமானங்கள் மரியுபோல் நகர் மீது பறந்து சென்று குண்டுகளை வீசியுள்ளது.

Spread the love