எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 03 இந்திய மீனவர்கள் கைது

யாழ்.காரைநகர் கடற்பிராந்தியத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 03 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு(19) முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே படகொன்றுடன் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர், கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். மீனவர்கள் காங்கேசன்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Spread the love