எல்லை தாண்டிச் சென்று மீன்பிடியில் ஈடுபட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை

எல்லை தாண்டிச் சென்று மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இந்தியச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் தமது படகுகளையும் உறவுகளையும் மீட்டுத்தருவதற்கான கோரிக்கையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்துள்ளனர்.

நேற்று(13) காலை கடற்றொழில் அமைச்சில் கடற்றொழில் அமைச்சரை சந்தித்து தமது கோரிக்கையை முன்வைத்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது. இதன்போது சட்ட ரீதியாக படகுகளை விடுவிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

Spread the love