எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரையும் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

எல்லைத்தாண்டி மீன்பிடித்தகுற்றத்தில் ஈடுபட்டதாக நாகை, காரைக்கால் ,பிரதேசங்களைச் சேர்ந்த 21 மீனவர்கள் கடந்த மாதம் அதாவது ஜனவரி மாதம் 31-ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்கள், மீனவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது 21-ம் தேதிவரை சிறையில் அடைக்க மன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

இன்றுடன் சிறைக்காவல் முடிந்த நிலையில் மீனவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனர், அவ்வேளை இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் 21 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாளில் தாயகம் திரும்ப தாயாராகி வருகின்றனர்.

Spread the love