எரிபொருளை ஏற்றிய 4 கப்பல்கள் இம்மாதம் இலங்கை வரவுள்ளது – எரிசக்தி அமைச்சர்

டீசலை ஏற்றிய மூன்று கப்பல்கள் உட்பட நான்கு எரிபொருள் கப்பல்கள், இம்மாதம் இலங்கைக்கு வரவிருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், டீசலை ஏற்றிய  கப்பல் இம்மாதம் 8 அல்லது 9ஆம் திகதியில் நாட்டுக்கு வரவுள்ளது

இரண்டாவது கப்பல் ஜூலை 11ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கு இடையிலும் மூன்றாவது கப்பல் ஜூலை 15க்கும் 17 ஆம் திகதிக்குமிடையிலும் இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

பெற்றோலுடனான கப்பல் ஜூலை 22ஆம் திகதிக்கும் 23ஆம் திகதிக்குமிடையில் இலங்கையை வந்தடையும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் கூறினார்.

Spread the love