எப்லாடொக்சின்னினால் பிள்ளைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக தேவையற்ற வகையில் அச்சப்படத்தேவையில்லை

எப்லாடொக்சின்னினால் (Aflatoxin)  பிள்ளைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதில்லை. எப்லாடொக்சின்னினால் பிள்ளைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக தேவையற்ற வகையில் அச்சப்படத் தேவையில்லை என பதுளை மாகாண பொது வைத்தியசாலை புற்றுநோய் தொடர்பான விசேட வைத்தியர் லக்ஷமன் அபேநாயக்க தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பான காணொளி ஒன்றின் மூலமும் அவர் தெளிவுபடுத்தினார். திரிபோஷவில் ஆகக் கூடிய நச்சுப்பதார்த்தங்கள் அடங்கியுள்ளதா? என்பதற்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

பிள்ளைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷவில் எப்லாடொக்சின் மூலம் ஏற்படக்கூடிய அடிப்படைப் பாதிப்பு மிகவும் குறைவாகவே காணப்பதுவடன், இது தொடர்பில் கூடிய வயதுப் பிரிவை கவனத்திற் கொள்ளும்போது பிள்ளைகளுக்கு கல்லீரல் புற்று நோய் ஏற்படுவதில்லை என்றும் வைத்தியர் மேலும் விளக்கமளித்தார்.

இலங்கையில் கல்லீரல் புற்றுநோய் அரிதாகவே காணப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார். இப்புற்று நோய் வயதானவர்களுக்கு மாத்திரமே ஏற்படும். இந்நோயின் அறிகுறிகள் தொடர்பாகக் குறிப்பிட்ட அவர் அதிகமாக மதுபானம் பயன்படுத்துவோருக்கே இப்புற்றுநோய் ஏற்படுவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

எப்லாடொக்சின் என்ற எப்லாஜிலசஸ் என்ற திரவ வர்க்கத்தில் வளர்ச்சியடையும் இரசாயனமாகும். இது புற்றுநோய் வகையில் ஒரு புற்றுநோயிக்கு காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தவிர பொதுவான விடயமாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் பாரியளவிலான எப்லாடொக்சின் ஒரே நேரத்தில் உணவு வழியில் பிரவேசித்தால் எப்லாடொக்சின் என்ற எப்லாஜிலசஸ் என்ற திரவ வர்க்கத்தில் வளர்ச்சியடையும் இரசாயனமாகும். இது புற்றுநோய் வகையில் ஒரு புற்றுநோயிக்கு காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தவிர பொதுவான விடயமாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் பாரியளவிலான எப்லாடொக்சின் ஒரே நேரத்தில் உணவு வழியில் பிரவேசித்தால் கல்லீரல் பாதிப்படைய கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

எப்லாடொக்சின் உணவில் சேர்வதனால் பிள்ளைகளின் நரம்பு வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுவதான நிலைபாடு இருந்த போதிலும் அதனை உறுதி செய்வதற்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்தார். இதனால் பிள்ளைகளின் நரம்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் காரணியாக எப்லாடொக்சின் ஏற்றுகொள்ளபடவில்லை என்றும் அவர் கூறினார். பாதிப்படைய கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

எப்லாடொக்சின் உணவில் சேர்வதனால் பிள்ளைகளின் நரம்பு வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுவதான நிலைபாடு இருந்த போதிலும் அதனை உறுதி செய்வதற்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்தார். இதனால் பிள்ளைகளின் நரம்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் காரணியாக எப்லாடொக்சின் ஏற்றுகொள்ளபடவில்லை என்றும் அவர் கூறினார்.

Spread the love