எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து திரையரங்குகளுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது, கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், வடலூர் உள்ளிட்ட இடங்களில் 60 சினிமா திரையரங்குகள் உள்ளன. இந்த நிலையில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கடலூரில் உள்ள 3 திரையரங்குகள் உள்பட மாவட்டம் முழுவதும் 17 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

இதற்கிடையே ஜெய்பீம் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சை காட்சிகள் தொடர்பாக பா.ம.க.வினர், எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட அனுமதி வழங்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இருப்பினும் கடும் எதிர்ப்பைத் மீறி திரையரங்குகளில் நேற்று எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையிடப்பட்டது. இதையொட்டி அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 17 திரையரங்குகளிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Spread the love