உலக வங்கியுடன் 500 மில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

உலக வங்கியுடன் 500 மில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 2023 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான 2 வருட காலப்பகுதிக்கான அபிவிருத்தி கொள்கை நிதி வழங்கல் திட்டத்தின் கீழ், உலக வங்கியின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 2023 ஆம் ஆண்டிற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இணையான விசேட கணக்குரிமை எனப்படும் SDR 371.2 மில்லியன் நிதியை இரு தவணைகளில் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவதற்காக நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Spread the love