உலக சமாதான பேரவை கூட்டத்தில் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தென் கொரியாவிற்கு சென்றுள்ளார்.தென் கொரியாவின் சோல் நகரில் நடைபெறும் உலக சமாதான பேரவை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதான உரையாற்றவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love