உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் ஆல்கஹால் கலந்த பீர் விற்க வாய்ப்பு

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில், ஆல்கஹால் கலந்த பீர் வகைகளை விற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில், ஆல்கஹால் கலந்த பீர் வகைகளை விற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கட்டாரில் வரும் நவம்பர் மாதம் முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், மைதானத்தில் மது அருந்த விரும்பும் ரசிகர்களுக்காக முன்னேற்பாடுகளை பிபா (FIFA) அமைப்பு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதன்படி, ரசிகர்களுக்கு ஆல்கஹால் கலந்த பீரை மைதான வளாகத்தில் விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில், ஆல்கஹால் இல்லாத பானங்களை மட்டும் ரசிகர்கள் இருக்கைக்கு எடுத்தச்செல்ல அனுமதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

Spread the love