உலகக்கிண்ண வெற்றியின் பின்னர் முடிவை மாற்றினார் மெஸ்ஸி

2022 பீஃபா உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய ஆர்ஜென்டீனா அணிக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி, தங்கப்பந்து விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி, கால்பந்து அரங்கிலிருந்து தான் ஓய்வு பெறப்போவதில்லை என அறிவித்துள்ளார். கட்டாரில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உலக சம்பியனாக இன்னும் சில போட்டிகளில் விளையாட விரும்புவதாக தெரிவித்தார்.

அதன்படி, 2024 ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா மற்றும் எதிர்வரும் பீஃபா உலகக் கிண்ணத் தொடர்களில் அவர் பங்கேற்கவுள்ளார். 35 வயதான லியோனல் மெஸ்ஸி கட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக கடந்த ஒக்டோபரில் அறிவித்தார். லியோனல் மெஸ்ஸி முதன்முதலில் 2005 இல் ஆர்ஜென்டீனா அணிக்காக விளையாடினார். அவர் 2006 ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை எதிர்கொண்டார். அத்துடன், 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும் வென்றார்.

Spread the love