உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரியை மீண்டும் விசாரிக்க கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொறுப்பு என்பது தெளிவாக தெரிந்தால், அவரை கைது செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சமூக உறவு பிரிவின் தலைவர் அருட்தந்தை ஜூட் கிறிஸாந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரி, நேற்று குற்றப்புலனாய்வுத்துறையில் முறைப்பாட்டை செய்த பின்னர், ஊடகவியலாளர்களிடம் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஏற்கனவே தெரிவித்திருந்தமையையும் அருட்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடமும் இது தொடர்பில் வாக்குமூலம் பெறப்படவேண்டும் என்றும், தாம் குற்றப்புலனாய்வுத்துறையிடம் கோரியதாக அருட் தந்தை ஜூட் கிறிஸாந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Spread the love