உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியை நடத்த வேண்டும்

உதைபந்தாட்ட அக்கடமிகளுக்கு இடையில் சுற்றுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு யாழ் மாவட்ட உதைபந்தாட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் யுவராஜ் இடம் உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் பல வருடங்களுக்கு முன்னரே அக்கடமிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் யாழ். மாவட்டத்தில் இப்பொழுதே பல அக்கடமிகள் ஆரம்பிக்கப்படுகின்றன. இதனை வளர்க்கும் முகமாகவும் அதில் பங்கு பற்ற செல்லும் வீரர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எதிர்காலத்தில் இலங்கை அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போட்டிகள் அமைய வேண்டும்.


அந்த வகையில் வலிகாமத்தில் கிறாஸ்கொப்பர்ஸ் அக்கடமி, நொதேன் விளையாட்டு கல்லூரி அக்கடமி. வலிகாம உதைபந்தாட்ட அக்கடமி, இளவாலை அக்கடமி , சிறிமுருகன் அக்கடமி, திருக்குமரன் விளையாட்டு அக்கடமி என பல்கி பெருகியதுடன் அரியாலையில் பொதுவான உதைபந்தாட்ட அக்கடமியும் உள்ளது. இதில் பங்குபெறும் வீரர்களுக்கு இலக்கு நோக்கிய பயணமாக அத்திபாரமி டுவது சுற்றுப் போட்டிகளே என மேலும் தெரிவித்துள்ளது.

Spread the love