ஈஸ்டர் தாக்குதல் பிணையில் விடுவிக்கப்பட்ட இருவர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு !

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முற்பகல் 9 மணி முதல் 12 வரையான காலப்பகுதியில் குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பிணையில் விடுக்கப்பட்டுள்ள அப்துல் ஹமீட் மொஹமட் ரிபாய் மற்றும் மொஹமட் மர்சுக் ரிலா ஆகியோருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Spread the love