இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவை

அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடைபெற்று வருகின்றது. 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தற்போது பதவியேற்றுள்ளது. இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

  • தினேஷ் குணவர்தன – பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
  • ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்டம்
  • நாசீர் அஹமட் – சுற்றாடல்
  • டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி
  • கனக ஹேரத் – நெடுஞ்சாலை
  • நாலக கொடஹேவா – ஊடகத்துறை
  • காஞ்சனா விஜேசேகர – மின்சாரம் மற்றும் எரிசக்தி
  • சன்ன ஜயசுமண – சுகாதாரம்
  • பிரசன்ன ரணதுங்க – பொது பாதுகாப்பு, சுற்றுலா
  • திலும் அமுனுகம் – போக்குவரத்து, கைத்தொழில்
  • விதுர விக்கிரமநாயக்க – தொழிற்துறை
  • ஜனக வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்
  • ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி
  • மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல்
  • விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு
  • தேனுக விதானகமகே -விளையாட்டு, இளைஞர் விவகாரம்
  • பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பல்.
Spread the love