இலங்கை விமானத்தின் மூலம் மாலைதீவை சென்றடைந்துள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று(13) அதிகாலை மாலைதீவை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இன்று(13) அதிகாலை 1.45 மணியளவில் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஜனாதிபதி இன்று(13) அதிகாலை 3 மணியளவில் மாலைதீவின் தலைநகரான மாலே நகரை சென்றடைந்ததாக பிபிசி உலக சேவை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் அவரது மனைவி அயோமா ராஜபக்ஸ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவருடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love