இலங்கை தொடர்பிலான மீளாய்வு அறிக்கை இன்று சமர்ப்பிக்கவுள்ளார் பச்லெட்

இலங்கை தொடர்பில் தமது மீளாய்வு அறிக்கையை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கையின் பார்வைக்காக சமர்ப்பிக்கவுள்ளார் இன்று திங்கட்கிழமை சமர்பிக்கவுள்ளார். இதனையடுத்து இலங்கை அரசாங்கம் குறித்த அறிக்கை தொடர்பான தமது கருத்தை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்காக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சில முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது. அதில், இலங்கையின் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் திருத்தங்களும் உள்ளடங்கியுள்ளன. எனினும் இந்த மீள் திருத்தங்கள் போதுமானவையல்ல என்று ஏற்கனவே இலங்கையில் குறித்த சட்டத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியமும், இந்த மீள்திருத்தங்கள் மேலும் முன்னேற்றங்கள் சேர்க்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.


இதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி இலங்கை தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. எனினும் இந்த முறை வாக்கெடுப்பு எதுவும் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் செப்டம்பரில் இலங்கை மீதான மற்றும் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Spread the love