இலங்கை தமிழ் அரசியல் கைதிகளுக்கு உதவித்தொகை வழங்கிய லைகா சுபாஸ்கரன்!

விடுதலை செய்யப்பட்ட 26 இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 25 இலட்சம் உதவித்தொகையை லைகா குழும தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமாகிய அல்லிராஜா சுபாஸ்கரன் வழங்கியுள்ளார்.

லைகா குழுமத்தின் நிறுவனரும், தலைவரும் லைகா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலா ரூ. 25 இலட்சத்தை விடுதலை செய்யப்பட்ட இலங்கை 26 தமிழ் அரசியல் கைதிகளுக்கு சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கியுள்ளார். இந்த நிகழ்வில் லைகா குழும உப தலைவர் பிரேம் சிவசாமி மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கை ஜனாதிபதியுடன் சந்திப்புகளை மேற்கொண்டு விடாமுயற்சியுடன் இலங்கை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அல்லிராஜா சுபாஸ்கரன் வழிவகை செய்துள்ளார். பல ஆண்டுகளாக சிறையில் வாடிய கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் தலா ரூ. 25 இலட்சத்தை தனது தாயார் திருமதி ஞானாம்பிகையின் பெயரில் இயங்கி வரும் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் மொத்தம் ஆறரை கோடி ரூபாய்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love