இலங்கை கடற்படையால் கைதான மீனவர்கள் விரைவில் விடுதலை – தமிழக முதலமைச்சர்

இலங்கை கடற்படையினரால் கைதான, இராமேஸ்வரம் மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசாங்கத்திடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் கலந்துரையாடியுள்ளார். இந்நிலையில், தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு இணங்க, உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக, மத்திய அமைச்சர் உறுதியளித்ததாகவும், தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதமும் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை, தந்திரமாக தடுத்துநிறுத்தும் இலங்கை கடற்படையின் செயற்பாடுகளை, இனிமேலும் அனுமதிக்கக்கூடாதென, முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love