இலங்கையில் ராடர் தளத்தை நிர்மாணிக்க சீனா திட்டம்

இலங்கையில் ராடர் தளமொன்றை நிர்மாணிக்க சீனாதிட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்திய மற்றும் அமெரிக்காவின் இராணுவத் தளங்களை உளவு பார்ப்பதற்காக இந்த ராடர் தளத்தை சீனா இலங்கையில் அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை உளவுத் துறை தரப்புக்களால் இந்த திட்டம் தொடர்பிலான தகவல் வெளிக்கொணரப்பட்டுள்ளதாக பிரித்தானிய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு சீனா வழங்கிய கடன்களின் மூலோபாய ஆதாய நடவடிக்கையாக இந்த திட்டம் அமைந்துள்ளதென நிபுணர்களை கோடி காட்டி இந்த இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது.

இந்த ராடர் தளமானது மாத்தறை பகுதியில் தெய்வேந்திர முனைக்கு அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்திய கடற்பரப்பின் மேற்கு பகுதியில் உள்ள இந்திய கடற்படை முகாம்கள், தியாகோகார்சியாவிலுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவத்தளங்களை உளவு பார்ப்பதற்கு இந்த ராடர் சீனாவிற்கு பெரிதும் பயன்படும்.

மேலும், இந்தியாவிலுள்ள ஸ்ரீஹரி கோட்டா விண்வெளி ஆய்வு மையத்தின் நடவடிக்கைகள் மற்றும் ஓடிசாவிலுள்ள ஏவுகணை சோதனைத்தளம் ஆகியனவற்றையும் இந்த ராடர் மூலம் அவதானிக்க முடியும். கடந்த ஆண்டுகளில் சீனா 180 இற்கும் மேற்பட்ட விண்வெளி ஆய்வுக் கலங்களை ஏவியுள்ளதுடன் இந்த வருடத்தில் 200 விண்வெளி ஆய்வுக் கலங்களை அனுப்பவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love