இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் மட்டுமே இந்தியா கவனம் – ஜெய்சங்கர்

இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் அதற்கு எவ்வாறு உதவ முடியும் என் பதில் இந்தியாவின் கவனம் உள்ளது. ஏனைய விடயங்களில் இந்தியா தலையிடவில்லை. அந்தக் காரணிகளைப் பற்றி இந்தியா கவலைப்படவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்த ஜெய்சங்கர் மேலும் கூறுகையில், இலங்கையில் நிலைமை மிகவும் உணர்திறன் மற்றும் சிக்கலானது. இலங்கை மக்கள் எமது அண்டை வீட்டாராக இருப்பதால் அவர்களுக்கு ஆதரவளிப்பதே இந்தியாவின் அர்ப்பணிப்பு. இலங்கையர்கள் நட்பான மனிதர்கள். இந்த நட்பின் உணர்திறன் காரணமாகவே அவர்கள் மிகவும் கடினமான கட்டத்தில் இருக்கும்போது அவர்களுக்கு உதவ விரும்புகின்றோம். இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் அதற்கு எவ்வாறு உதவ முடியும் என் பதில் இந்தியாவின் கவனம் உள்ளது. ஏனைய விடயங்களில் இந்தியா தலையிடவில்லை. அந்தக் காரணிகளைப் பற்றி இந்தியா கவலைப்படவில்லை. எனவே சமூக ஊடகங்களில் வரும் அனைத்திற்கும் எம்மால் பதிலளிக்க முடியாது தற்போது அகதிகள் நெருக்கடி இல்லை என்றார்.

Spread the love