இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் கைது

SEA OF SRI LANKA  எனும் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் 02 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று முன்தினம்(05) முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக மீனவர்களை மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்காக புறப்பட்டவர்களே இவ்வாறு இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Spread the love