இலங்கைக்கு மேலும் உதவ இந்தியா ஆராய்கிறது 

 இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இலங்கைக்கு மேலும் உதவுவது குறித்து பாராளுமன்ற ஆலோசனை குழுவில் ஆராயப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையுடன் இணைந்து செயற்படுவதன் அவசியம் குறித்து ஒருமித்த ஆதரவு கிடைத்துள்ளது. இலங்கை எதிர்நோக்கியுள்ள வெவ்வேறு பிரச்சினைகள் மற்றும் அதற்கு இந்தியாவினால் வழங்கக்கூடிய ஒத்துழைப்புக்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார். 

Spread the love